சொந்தத்தை நம்பி அனாதையாக இறந்த காந்திமதி.. ஏன்னு கேட்க கூட நாதி இல்லாமல் தவித்த சோகம்

ஒரு தமிழ் திரைப்படத்தில் கிராமத்து கதாபாத்திரம் இருந்தால், நினைவுக்கு வருவது நடிகை காந்திமதி தான். அவரது திறமை மனோரமா என்ற மற்றொரு ஆளுமையால் ரசிகர்களுக்கு முழுதாக தெரியவில்லை.
மனோரமா பல படங்களில் நடித்தாலும், காந்திமதி நடித்த சில படங்களில் அவரது ஆளுமை மூலம் அனைவரையும் கவனிக்க வைத்தார். ஆனால் மனோரமா அளவுக்கு வாழ்நாள் அவருக்கு பெயர் கிடைக்கவில்லையே என்ற சோகம் அவருக்கு வாழ்நாள் முழுவதும் இருந்ததாம்.
காந்திமதி, சுவரில்லாத சித்திரங்கள், மண்வாசனை, கரகாட்டக்காரன், 16 வயதினிலே, முத்து போன்ற பல படங்களில் இவரது கதாபாத்திரங்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. குணச்சித்திர நடிகையாக மட்டுமல்லாமல், ஹீரோயின் வேடத்திலும், கிளாமர் நடிகையாகவும் வலம் வந்தார்.
சினிமா மார்க்கெட் வீழ்ச்சியடைந்த பிறகு , மை டியர் பூதம், கோலங்கள் போன்ற சீரியல்களிலும் தோன்றினார். இருப்பினும், காந்தி தனது வாழ்க்கையை விட்டுவிட்டு படத்தில் கவனம் செலுத்தினார். ஆனால் காந்திமதி சினிமாவில் கவனம் செலுத்தியதால் தன்னுடைய சொந்த வாழ்க்கையை கோட்டை விட்டார். அவரால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய்விட்டது.
தனது சகோதரியின் உதவியை நாடி காந்திமதி அவர்களுடைய குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார். ஆனால் அவரிடம் பணம் இருந்த வரை, சொந்தம் இருக்கும் என்ற வசனத்திற்கு ஏற்ப அவர் சம்பாதிக்கும் வரை அவரை தங்கத்தட்டில் வைத்து தாங்கிய அவரது சகோதரி காந்திமதிக்கு புற்றுநோய் வந்து அவஸ்தைப்பட்ட போது கண்டுகொள்ளவில்லையாம்.
காந்தியின் கடைசி நாளில், தவித்த வாய்க்கு தண்ணீர் கூட கொடுக்காமல் தனிமையில் இறந்தார். காந்திமதியின் நடிப்பால் எந்த திரைப்படங்கள் உங்களை கவர்ந்தன என்பதை ரசிகர்கள் கருத்துக்களில் இடுகையிடலாம்.