முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாவது வழக்கின் விசாரணைக்காக அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
ஏலவே நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அவர் நான்காண்டுகால கடூழிய சிறை தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
