தெரணியகலை கிரிஹேன பிரதேசத்தில் உள்ள ரக்கனாவ நீர்வீழ்ச்சியில் நீராடிக்கொண்டிருந்த சிறுமி ஒருவர் நீரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றது.
குறித்த சிறுமி நீரில் மூழ்கிய நிலையில் தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அங்ஹெட்டிகம பிரதேசத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
